Close
ஏப்ரல் 23, 2026 8:17 மணி

திருவண்ணாமலை தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்ன?

திருவண்ணாமலை.. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் தொகுதி.. 1970களில் திமுகவின் மூத்த தலைவர் ப.உ.சண்முகம் தொடர்ந்து ஜெயித்த தொகுதி.

1989, 1996, 2001, 2006-ல் திமுகவின் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி தொடர்ந்து ஜெயித்தார். 2011, 2016, 2021-ல் தற்போதைய அமைச்சர் எ.வ.வேலு தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தொகுதி இது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தேமுதிக – அமமுக, மநீம என பல முனை போட்டி நிலவியது. அதில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ வேலு 66.72% வாக்குகளுடன் முதல் இடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து பாஜகவை சேர்ந்த தணிக்கை வேல் 20.91%, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கமலக்கண்ணன்  6.77%, மநீமவை சேர்ந்த அருள் 3.02% வாக்குகளும் பெற்றிருந்தனர்.

 2021 தேர்தலில் எ.வ.வேலுவை எதிர்த்து பாஜகவின் தணிகைவேலு போட்டியிட்டார். எ.வ.வேலு, 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி. இங்கே இந்த முறை மறுபடியும் பாஜக போட்டியிடுது. அக்கட்சியின் ஏழுமலை பாஜக வேட்பாளராக களம் காண்கிறார்.

இத் தொகுதி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.

திருவண்ணாமலை மாநகராட்சி, திருவண்ணாமலை ஒன்றியம், செங்கம் பகுதியில் மேல்சிறுபாக்கம், கீழ்சிறுபாக்கம், ராதாபுரம், வாக்கிலாப்பட்டு, சோ்ப்பாட்டு, சே.கூடலூா், வரகூா், காம்பட்டு, வாணாபுரம், மழுவம்பட்டு, தென்கரிம்பலூா், பெருந்துறைப்பட்டு, குங்கிலநத்தம், பேராயம்பட்டு மற்றும் எடக்கல் கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது நடைபெறும்  2026  தேர்தலில் எ.வ.வேலு மீண்டும் களமிறங்கியுள்ளார். இம்முறை  சார்பில் பாஜக ஏழுமலை, தவெக சார்பில் அருள் ஆறுமுகம், நாம் தமிழர் சார்பில் விக்னேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இச்சிவாலயம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது உலகப்புகழ் பெற்ற தலமாக விளங்குகிறது. கோயில் நகரம் என்பதால் அது சாா்ந்த தொழில் இங்கு நடைபெறுகிறது.

இத்தொகுதியில் ஆதி திராவிடா், வன்னியா்கள், யாதவா், ரெட்டியாா், நாயுடு மற்றும் முதலியாா் சமூகத்தினா் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனா்.

திருவண்ணாமலை தொகுதி மக்களிடம் என்னென்ன பிரச்சினைகள் நிலவுகின்றன என்று விசாரிக்கப்பட்டது.அப்போது அவர்கள் தெரிவிக்கையில்;

போக்குவரத்து நெரிசல் மற்றும் போதிய வாகன நிறுத்த இடங்கள் இல்லாதது. இது பௌா்ணமி கிரிவல நாள்களில் கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

கோயிலை சுற்றிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தவில்லை,

திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தங்களுக்கு பிரத்தியேக வழி ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இதுவரை செய்யவில்லை என்ற ஆதங்கமும் ,திருவண்ணாமலை நகர பொதுமக்களிடம் உள்ளது.

மேலும் வெளியூர்களுக்கு சென்று தங்களது வாகனங்களில் ஊருக்குள் நுழைவது என்றால் மிகவும் கடினமாக உள்ளது என்ற வேதனையும் திருவண்ணாமலை நகர மக்களிடம் உள்ளது.

போக்குவரத்து நெரிசல் மற்றும் போதிய வாகன நிறுத்த இடங்கள் இல்லாதது. இது பௌா்ணமி கிரிவல நாள்களில் கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

திருவண்ணாமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு செல்வதற்கு ரயில் சேவை இதுவரை ஏற்படுத்தவில்லை என்ற குறை பக்தர்களிடம் உள்ளது.

மக்கள் தொகைக்கு ஏற்ற சிறப்பு மருத்துவ வசதிகள், நவீன உபகரணங்கள் மற்றும் போதிய மருத்துவா்கள் அரசு மருத்துவமனைகளில் இல்லாதது குறையாக உள்ளது.

மேலும், விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகள் மற்றும் நவீன நீா்ப்பாசன வசதிகள் குறைவாக உள்ளதால், விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்படுகிறது. உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்சாலைகள் குறைவாக இருப்பதால், இளைஞா்கள் வேலைக்காக வெளியேறும் நிலை உள்ளது.

பொதுமக்களின் கோரிக்கைகள்

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு கோவிலில் தனி பாதை ஏற்பாடு செய்ய வேண்டும்

கோவிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும்

திருப்பதியை போன்று ஆன்லைன் புக்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், விரைவான தரிசனத்திற்கு திருப்பதியை போன்று பக்தர்கள் ஓய்வறைஅமைக்க வேண்டும்

கிரிவல பாதையில் ஒவ்வொரு 10 அடி இடைவெளியில் மரக்கன்றுகள் நட வேண்டும்

ஈசானிய குப்பை கிடங்கை முழுவதுமாக அகற்றி சுத்தம் செய்ய வேண்டும், குப்பை கிடங்கு அகற்றிய இடத்தில் வெளிமாநில வாகனங்களுக்காக பெரிய Parking வசதி அமைக்க வேண்டும்

மாநகரில் உள்ள அனைத்து ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வார வேண்டும்

சாத்தனூர் அணையிலிருந்து மாநகருக்கு 24 மணி நேர பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்

பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக சுற்றுலாத்துறை மூலம் தகவல் மையம் அமைக்க வேண்டும்

திருவண்ணாமலை மாநகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும், திருவண்ணாமலையில் மாநகர காவல் ஆணையம் அமைக்க வேண்டும்

திருவண்ணாமலை நகர வளர்ச்சி ஆணையம்  அமைக்க வேண்டும்,

திருவண்ணாமலையில் இருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி, மதுரை போன்ற நகரங்களுக்கு நேரடி ரயில் சேவை தொடங்க வேண்டும்

திருவண்ணாமலை – திண்டிவனம் ரயில்வே திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தி தர வேண்டும்

விழுப்புரம் கோட்டத்தை இரண்டாக பிரித்து திருவண்ணாமலையை தலைமை இடமாகக் கொண்டு புதிய போக்குவரத்துக் கோட்டம் உருவாக்க வேண்டும்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என முக்கிய கோரிக்கைகளாக இத்தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருவண்ணாமலை தொகுதி பொதுமக்களின் இந்த நீண்ட கோரிக்கைகளை யார் நிறைவேற்றப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அமைச்சர் எ.வ.வேலு,            பாஜக ஏழுமலை,                 தவெக  அருள் ஆறுமுகம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top