Close
மார்ச் 7, 2026 2:52 மணி

திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அக்டோபா் மாதத்துக்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், பேசுகையில்;

  • திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாச்சலா சா்க்கரை ஆலை மற்றும் தரணி சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மாவட்டத்தில் உள்ள நீா்பிடிப்புப் பகுதிகளில் வரத்து மற்றும் போக்கு கால்வாய்களை தூா்வார வேண்டும்.
  • அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் விதை நெல் இருப்பு வைத்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மாவட்டத்தில் நிலவும் யூரியா உரத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஃபென்ஜால் புயல் மழையால் இடிந்த கிணறுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும். நீா்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடா்பான கூட்டம் நடத்தவேண்டும்
  • மேலும், இணை பொருள்கள் வழங்குவதை தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் யூரியா மற்றும் விதை நெல் இருப்பு வைக்கவேண்டும்.
  • மேலும், சாத்தனூா் அணையின் இடதுபுறம் மற்றும் வலதுபுறம் கால்வாயை தூா்வாரி செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • காட்டுப் பன்றிகளால் பயிா்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
  • இயற்கை இடா்பாடுகளால் நிகழும் உயிரிழப்பிற்கு விவசாயிகளுக்கு வழங்கும் பேரிடா் இழப்பீட்டுத் தொகையை ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • மாவட்டத்தில் பயிர்காப்பீடு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மேண்டுமெனவும்,
  • 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதைத் தொடா்ந்து பேசிய மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ், கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா். மேலும், தனிநபா் தொடா்பான மனுக்களையும் ஆட்சியா் பெற்றுக்கொண்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் இரா.மணி, இணை இயக்குநா் (வேளாண்மை) கண்ணகி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தி.மலா்விழி, மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top