நாமக்கல் பகுதி கோழிப்பண்ணைகளுக்காக, கர்நாடகா மாநிலத்தில் இருந்து 2,600 டன் மக்காச்சோளம் ரயில் மூலம் இன்று நாமக்கல் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு, தீவனம் உற்பத்தி செய்வதற்காக, மக்கா சோளம், கடலை மற்றும் எள் புண்ணாக்கு, சோயா மற்றும் அரிசி, கோதுமை போன்ற தீவன மூலப் பொருட்கள், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் நாமக்கல் ரயில்வே நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
அவற்றை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோழிப் பண்ணைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கர்நாடகா மாநிலம், பீஜாப்பூரில் இருந்து, கோழித் தீவனத்திற்காக, 2,600 டன் எடையுள்ள மக்கா சோளம் 42 வேகன்களில், சரக்கு ரயில் மூலம், நாமக்கல் ரயில்வே நிலையத்திற்கு இன்று வந்தது.
அவற்றை, 110 லாரிகளில் ஏற்றப்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.




