Close
மார்ச் 7, 2026 4:23 மணி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்க நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துர்காமூர்த்தி வழங்கினார்.

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்  துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

பொதுமக்கள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, @ராடு வŒதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 546 மனுக்களை அளித்தனர்.

அவற்றை பரிசீலித்த கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை சார்பில், ஒரு பெண்ணிற்கு, ரூ. 1 லட்சம் மதிப்பில் ஆட்டோ மானியம், 5 பயனாளிக்கு தலா ரூ. 50,000 வீதம், ரூ. 2.50 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ கல்வி நிதியுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கு தலா ரூ. 15,750 வீதம் ரூ.47,250 மதிப்பில் சக்கர நாற்காலிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வரும் ரத்த வங்கிக்கு, அதிக அளவில் ரத்த தான முகாம் அமைத்து கொடுத்த, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசுவிற்கு, கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டினார்.

கூட்டத்தில், டிஆர்ஓ சரவணன், மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top