நாமக்கல் நகரில் நாளை நடைபெறும் பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசுகின்றார். நாளை மறுநாள் விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறகிறார்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நாளை 4ம் தேதிதி, மாலை 5 மணிக்கு, நாமக்கல் பார்க் ரோட்டில், மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில், அவர் கலந்துகொண்டு பேசுகிறார்.
மத்திய இணை அமைச்சர் முருகன், மாநில துணைத்தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசுகின்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நாமக்கல் நகரில் தங்குகிறார்.
நாளை மறுநாள், 5ம் தேதி புதன்கிழமை, பாஜக சார்பில் மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஊனாங்கல்பட்டியில் விவசாயிகளுடன் நயினார் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. மத்திய இணை அமைச்சர் முருகன், மாவட்ட பாஜ தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். மாவட்ட பாஜக விவசாய அணி தலைவர் செந்தில்வாசன், துணைத்தலைவர் தர்மலிங்கம், பொதுச்செயலாளர் விஜயமூர்த்தி, மோகனூர் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் அதிஷ், பொது செயலாளர்கள் பழனிசாமி, சக்திவேல், விவசாய அணி ஒன்றியத் தலைவர் தேவராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.




