மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர் சாம்பியன் பட்டம் பெற்றார்.
நாமக்கலில் உள்ள ஏரோ பிரைன் அபாகஸ் மையத்தில், மாவட்ட அளவிலான பீட்ஸ் ஆஃப் அபாகஸ் பிரில்லியின்ஸ் லெவல் 3 என்ற போட்டி நடைபெற்றது.
பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் போட்டியில் கலந்துகொண்டனர். நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவர் ரிஷிக் இந்த போட்டியில் கலந்துகொண்டு, முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
மாணவர் ரிஷிக்கை, குறிஞ்சி பள்ளி தாளாளர் தங்கவேல், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.




