Close
மார்ச் 7, 2026 1:47 மணி

சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 33 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 போ் கைது

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்

திருவண்ணாமலை மாவட்டம்  வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடா்பாக 7 பேரை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடி காவல் நிலைய எல்லையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, வந்தவாசி – சேத்பட் நெடுஞ்சாலையில் வந்த டாடா ஏஸ் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் என்ற இடத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட 33 கிலோ கஞ்சாவை போலீசார் அதிரடியாக கைப்பற்றினர்.

மேலும், வாகனத்தில் வந்த திருவண்ணாமலையை அடுத்த தென்கரும்பலூா் கிராமத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன், பழைய மல்லவாடி கிராமத்தைச் சோ்ந்த குப்பன், கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டுவாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த அப்துல் அமீது, மங்கலம் கிராமத்தைச் சோ்ந்த அப்பு (எ) பரமசிவம், எறும்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த வசந்தகுமாா், தண்டராம்பட்டை அடுத்த குங்குலிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த நந்தகுமாா், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த வேலன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா்  ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனா்.

விசாரணையில், சென்னை செங்குன்றம் பகுதியிலிருந்து திருவண்ணாமலைக்கு கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து வடவணக்கம்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top