Close
ஏப்ரல் 23, 2026 10:00 மணி

புழல் சிறையில் பிரபல தாதா நாகேந்திரனின் மகனுக்கு செல்போன் பேட்டரி சப்ளை செய்ய முயற்சி

சென்னையின் பிரபல தாதாவான நாகேந்திரனின் இளைய மகன் அஜித்ராஜ் கொடுங்கையூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புழல் மத்திய சிறையில் வழக்கறிஞர்கள் கைதிகள் நேர்காணல் அறையில் அஜித்ராஜை சந்திப்பதற்காக ராஜி என்ற வழக்கறிஞர் வந்துள்ளார். அப்போது தடுப்புகளை தாண்டி கைதி அஜித் ராஜிற்கு வழக்கறிஞர் செல்போன் பேட்டரியை வீசி சப்ளை செய்ய முயன்றுள்ளார்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறை காவலர்கள் இதனைக் கண்டு செல்போன் பேட்டரியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் புழல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைதிக்கு செல்போன் பேட்டரி சப்ளை செய்ய முயன்ற வழக்கறிஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் உயிரிழந்த பிரபல தாதா நாகேந்திரனின் சடலத்தின் முன்பாக பரோலில் வந்த அவரது இளைய மகன் அஜித்ராஜ் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top