Close
மார்ச் 7, 2026 6:02 மணி

ஆன்லைன் மூலம் தமிழக அரசு நேரடியாக மணல் வழங்க மணல் லாரி சங்கத்தினர் கோரிக்கை

நாமக்கல்லில், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதகாப்பு சங்க தலைவர் ராஜசேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

தமிழகத்தில் அரசு மணல் குவாரிகள் திறக்கப்பட்டதும், ஆன்லைன் மூலம் தமிழக அரசே நேரடியாக மணல் விற்பனை செய்ய வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாரள்கள் பாதுகாப்புச் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க தலைவர் ராஜசேகர் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சுமார் 75 ஆயிரம் மணல் லாரிகள் இயங்கிக்கொண்டிருந்தன. மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்றதைத் தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளாக மணல் குவாரிகள் இயங்கவில்லை. இதனால் பலர் லாரிகளை தொடர்ந்து ஓட்ட முடியாததால், லாரிக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் லாரிகளை விற்பனை செய்துவிட்டனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மணல் லாரிகள் உள்ளன. இவைகளை இயக்க முடியாமல் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, தமிழக அரசின் சாபில் நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாறு உள்ளிட்ட 8 இடங்களில் அரசு மணல் குவாரிகள் துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குவாரி அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு லாரிகள் சென்றுவருவதற்கான பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அரசு மணல் குவாரிகள் திறப்பதற்கு முன்பு, மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, மணலுக்கு குறைந்த விலை நிர்ணயித்து பொதுமக்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.

ஏற்கனவே குறைந்த விலையில் எம்.சாண்ட் பயன்படுத்தி வருபவர்கள், அதிக விலைக்கு மணல் விற்பனை செய்தால் வாங்க முன்வரமாட்டார்கள். மேலும் அரசு குத்தகைதாரர்களை நியமித்து அவர்கள் மூலம் இரண்டாம் விற்பனையாக மணல் வழங்கினால், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று, மணல் விலை அதிகரிக்கும்.

இவ்வாறு ஏற்கனவே நடைபெற்ற முறைகேட்டால் ரூ. 4,500 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கணக்கிட்டுள்ளது. எனவே தமிழக அரசு லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து, நேரடியாக மணல் விற்பனை செய்ய முன்வரவேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், அனைத்து லாரிகளுக்கும் வரிசைப்படி மணல் வழங்க வேண்டும். இதற்கான டிஎன்சாண்ட் ஆப் மூலம் அனைத்து லாரிகளையும் முன்கூட்டியே பதிவு செயய வேண்டும்.

தமிழக அரசு ஆன்லைன் மூலம் மணல் வழங்காமல், காண்ட்ராக்டர்கள் மூலம் இரண்டாம் விற்பனையாக மணல் விற்பனை செதால், மணல் விலை கண்டிப்பாக அதிகரிக்கும். அவ்வாறு முறைகேடு நடைபெற்றால், பொதுமக்களை ஒன்றுதிரட்டி மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் மூலம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top