Close
மார்ச் 7, 2026 7:19 மணி

டூ வீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு: மர்ம நபர்கள் கைவரிசை

செயின் பறிப்பு - கோப்பு படம்

நாமக்கல் அருகே டூ வீலரில் கணவருடன் உட்கார்ந்து சென்ற பெண்ணிடம் இருந்து, பின்புறம் டூ வீலரில் வந்த நபர்கள், இரண்டரை பவுன் தங்க தாலி செயினை பறித்துச் சென்றனர்.

நாமக்கல் மாவட்டம்,என்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், இவரது மனைவி லட்சுமி (30). கடந்த, 6ம் தேதி அவர்கள் குடும்பத்துடன், நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோயிலுக்கு வந்துள்ளனர்.

இரவு, சுவாமி தரிசனம் செய்த பின், இருவரும் அவர்களது மொபட்டில் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். நாமக்கல் – திருச்சி மெயின் ரோட்டில், நாகராஜபுரம் அருகே சென்றபோது, அவர்களுக்குப் பின்னால், ஹெல்மெட்  அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களில், பின்புறம் உட்கார்ந்து வந்த நபர், திடீரென லட்சுமி கழுத்தில் கை வைத்து, அவர் அணிந்திருந்து ஏழரை பவுன் தாலி செயினை பறிந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த லட்சுமி, தாலி செயினை இறுகப் பிடித்துக் கொண்டார். அதில், இரண்டரை பவுன் தாலி செயின், மர்ம நபரின் கையில் மாட்டிக் கொண்டது. உடனே சத்தம் போட்டார். அதற்குள் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து, புகாரின் பேரில் நாமக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top