நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நகருக்கு உட்பட்ட சேலம் மெயின் ரோடு, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, பரமத்தி ரோடு, சேந்தமங்கலம் ரோடு, மோகனூர் ரோடு, திருச்செங்கோடு ரோடு, ஆஞ்சநேயர் கோயில் பகுதி, மாவட்ட ஆட்சியர் வளாகம், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில், வாகனங்கள் மூலம், கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மேற்பார்வையில், மாநகர் மருத்துவ அலுவலர் கஸ்தூரிபாய், சுகாதார அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கரன், ஜான் ராஜா, சுப்பிரமணியன், களப்பணி உதவியாளர் சபரிநாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




