நாமக்கல் மாவட்டத்தில் 16ம் தேதி நடைபெறும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் 2,056 தேர்வர்கள் கலந்துகொள்கின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான (ஐடிஐ லெவல்), கம்ப்யூட்டர் மூலமான போட்டித்தேர்வு, 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரையும் 2 பிரிவுகளாக நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியில் கல்லூரியில் காலையில் 329 பேரும், மாலையில் 329 பேரும் தேர்வு எழுதுகின்றனர். முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் காலையில் 499 பேரும், மாலையில் 499 பேரும் தேர்வு எழுதுகின்றனர். திருச்செங்கோடு கேஎஸ்ஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் காலையில் 200 பேரும், மாலையில் 200 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
போட்டித் தேர்விற்கு வரும் தேர்வர்கள் முற்பகல் தேர்விற்கு காலை 8.00 மணிக்குள்ளும், பிற்பகல் தேர்விற்கு மதியம் 1.00 மணிக்குள்ளும் தேர்வு கூடங்களுக்கு சென்றடையவேண்டும்.
மேற்படி தேர்விற்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




