Close
மார்ச் 7, 2026 1:41 மணி

மாநில அளவில் சிலம்பம் போட்டி: பதக்கம் வென்ற குறிஞ்சி பள்ளி மாணவிகள்

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற, நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவிகளை பள்ளி தாளாளர் தங்கவேல் பாராட்டினா

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.

மாநில அளவிலான சிலம்பம் போட்டி, கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் போட்டிகளில் கலந்துகொண்டனர்.

நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி 5ம் வகுப்பு மாணவி ரோஷிணி, ஒற்றைக்கம்பு சிலம்பம் பிரிவில் கலந்துகொண்டு, மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

குறிஞ்சி பள்ளி 8ஆம் வகுப்பு மாணவி மதுலிகா ஒற்றைக்கம்பு பிரிவில் 2ஆம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பதக்கம் வென்ற 2 மாணவிகளும் தேசிய அளவில் நடைபெறும் சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெற்றனர்.

தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவிகளை குறிஞ்சி கல்வி நிறுவனங்களின் தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top