Close
மார்ச் 7, 2026 1:06 மணி

புத்தக விமர்சனம்: இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி எழுதிய “Hands of Forgotten Faces” கவிதை புத்தகம்

இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி அவர்களின் “Hands of Forgotten Faces” கவிதை புத்தகம், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி Cambridge Pegasus Elliot Mackenzie பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. பதிப்பக இணையவழிமூலம் ஒரு பிரதி வாங்கினேன். அமேசான் தளத்திலும் கிடைக்கிறது.

எனது அன்பிற்குரிய நண்பர் சீனு ராமசாமியின் ஆழமான இலக்கிய நாட்டத்தையும், புலமையையும், தேர்ந்தெடுத்த நூறு கவிதைகளைக் கொண்ட இந்த தொகுப்பில் காணலாம்.

அவரது எழுத்து நடை மற்றும் சிந்தனைகளை சிதைக்காமல், சிங்கப்பூர் நாவலாசிரியர் ஜெயந்தி சங்கர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.

ஒரு படைப்பை மொழிபெயர்க்கும்போது, படைப்பாளி சொல்ல வருவதை ஆணித்தரமாகச் சொல்வதிலிருந்து நழுவுதல் கூடாது. மொழிபெயர்ப்பு என்பதை அறியாமல் தெளிந்த நீரோட்டம் போன்று மொழிபெயர்ப்பது, உள்ளடக்கத்தை தொலைத்து விடாமல், கவிதை கருவை அப்படியே தருவது முக்கியம். அந்த வகையில் இயக்குனரின் படைப்பை சுவை குன்றாமல் கொடுத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். பாராட்டுகள்.

கவிதை தலைப்புகளை குறிப்பிட்டு, உள்ளடக்கத்திற்கு ஓரிரு பக்கங்களை ஒதுக்கியிருக்கலாம். கூடவே பக்க சீரமைப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒருவேளை நவீன புத்தக உருவாக்கலில் இவையில்லாமல் இருப்பது புது அணுகுமுறையாக இருக்கலாம். மற்றபடி புத்தக வடிவமைப்பு நேர்த்தியாக உள்ளது.

ஜன்னலைத் திறந்து தான் பாரேன்
உன் அன்புக்காக
உன்னைத் தேடும் காற்று
உன்னில் நிறையும்..,

என்று சீனு ராமசாமி சொல்வாரே அதுபோல
இந்த புத்தகத்தை திறந்து பாருங்கள்
பாரம் குறையும், மனம் இலேசாகும்.

இறக்கை இல்லாமல்
ஒரு முறை பறந்து பார்க்கலாம்..,

இங்கிலாந்திலிருந்து சங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top