Close
மார்ச் 7, 2026 6:03 மணி

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பெண்கள் மௌன போராட்டம்

திருவண்ணாமலை மாநகர மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிவெளி பூங்கா முன்பு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு ஆதார மையம் சங்கத்தின் சார்பாக கருப்பு ஆடை அணிந்து அகில உலக பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினத்தை அனுசரித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். பெண் சிசு கொலை கருக்கொலையை தடுத்து நிறுத்த வேண்டும், போதைப் பொருள்களை தடை செய்ய வேண்டும்.

அரசு சாா்ந்த, அரசு சாரா நிறுவனங்களில் ஐசிசி குழு கட்டாயம் இருக்க வேண்டும். உணவு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த வேண்டும். மத்திய, மாநில மகளிா் ஆணையத்திற்கு போதிய நிதியை வழங்க வேண்டும்.

குழந்தை திருமணங்கள் தடை செய்யவேண்டும். பெண்களுக்கு சமமாக சொத்துரிமை வழங்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பெண்கள்கையில் ஏந்தியவாறு மத்திய, மாநில அரசுகள் தங்கள் கோரிக்கைகளை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக 50க்கும் மேற்பட்டபெண்கள் கருப்பு ஆடை அணிந்து மௌன போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பொது மக்களின் கவனத்தையும் ஏற்படுத்தியது,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top