மத்திய அரசின், 4 தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி, கொல்லிமலையில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொல்லிமலை செம்மேடு பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐஎம் தாலுகா தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். வெள்ளைச்சாமி, ரேவதி, பழனிசாமி, கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் சின்னசாமி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாணிக்கம் உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு, மத்திய அரசின் 4 தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
முடிவில் செம்மேடு கிளை செயலாளர் ராஜ் நன்றி கூறினார்.




