Close
மார்ச் 7, 2026 5:48 மணி

உசிலம்பட்டி அருகே சந்தனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

உசிலம்பட்டி அருகே, சந்தைப்பட்டியில் 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு சந்தனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வகுரணி ஊராட்சிட்குட்பட்ட சந்தைப்பட்டி கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சந்தன மாரியம்மன் கோவில் புதியதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு, முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜைகள், இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவானது தொடர்ந்து மங்கள இசை முழங்க கடம் புறப்பாடாகி சந்தன மாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top