நகரேஷு காஞ்சி என மஹாகவி காளிதாசரால் போற்றி புகழப்படும் காஞ்சிபுரத்தின் முக்கிய சைவ திருக்கோவிலான ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் குடமுழுக்கு விழா வருகின்ற டிசம்பர் 8 ஆம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது,
இதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, இது குறித்து ஏகாம்பரநாதர் ஆலய ஸ்தானீகர் திரு. வினோத் நாயஹர் தெரிவித்ததாவது:

நமது பாரத தேசத்தின் 7 முக்தி அளிக்க கூடிய நகரங்களில் ஒன்றான நம் காஞ்சி மாநகரின் பெருமைகளுள் தலையானதாகவும் பஞ்ச பூத ஸ்தலங்களில் பூமி ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீ ஏலவார்குழலி உடனுரை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் குடமுழுக்கு வைபவம் வருகின்ற டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி காலை 6.30 மணிக்குள் நடைபெறும்
இதற்கான பூஜைகள் டிசம்பர் 4 ஆம் தேதி துவங்குகிறது. 6 காலம் யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்று டிசம்பர் 8ஆம் தேதி காலை குடமுழுக்கு நடைபெற இருக்கிறது,
குடமுழுக்கிற்கு திருக்கோவில் புனரமைக்கும் பணி இந்து சமைய அறநிலையத்துறையால் மிகவும் நேர்த்தியான முறையில் செய்யப்பட்டுள்ளது,

இந்த குடமுழுக்கு விழாவில் 170 சிவாச்சா ர்யர்களும், 30கும் மேற்பட்ட ஓதுவார்களும் கலந்து கொண்டு கைங்கர்யம் செய்ய இருக்கிறார்கள். காஞ்சிபுரம் முழுக்கவே விழா கோலம் பூண்டிருக்கிறது,
இம் மகத்தான வைபவத்தில் அனைவரும் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து இறை அருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் என கூறினார்




