Close
மார்ச் 7, 2026 12:07 மணி

மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்தால் கண் பார்வை மேம்படும்: கண் மருத்துவர் ஆலோசனை

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற, கண் சிகிச்சை முகாமில் அரசு கண் மருத்துவர் ஷேபனா பேசினார்.

மொபைல் ஃபோன் பயன்பாட்டை குறைத்தால் கண் ஆரோக்கியம் மேம்படும் என அரசு கண் மருத்துவர் ஷோபனா தெரிவித்தார்.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் கண் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். அரசு கண் மருத்துவர் ஷோபனா பங்கேற்று பேசியதாவது: ஒவ்வொருவரும் தங்களின் கண் பார்வையைப் பாதுகாக்க வேண்டும். தினசரி ஆரோக்கியமான உணவு பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். காய்கறி, பழங்கள் உட்கொள்ளுதல் கண் பார்வை தெளிவு பெற உதவி செய்யும். அதிக நேரம் மொபைல் ஃபோன் பயன்படுத்துதல், நீண்ட நேரம் தூக்கமின்றி விழித்திருப்பது, தூசி போன்றவை கண்ணில் விழும் போதும் கண் பார்வையை பாதிக்கும். நல்ல தூக்கம், தேவையற்ற மொபைல் பயன்பாட்டை குறைத்தல் போன்ற தினசரி பழக்கவழக்கங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்றார்.

தொடர்ந்து, மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு நவீன கண் பரிசோதனை கருவிகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

விலங்கியல் துறைத் தலைவர் ராஜசேகரபாண்டியன், கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன், நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி, கல்லூரி மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top