Close
மார்ச் 7, 2026 4:41 மணி

நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் சொர்க்காவசல் திறக்கப்பட்டு, பரமபதல் வாசல் வழியாக சாமியின் ஜடாரியை பட்டாச்சாரியார்கள் எடுத்து வந்தனர். கலெக்டர் துர்கா மூர்த்தி உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்லில் உள்ள அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் வைகுடண்ட ஏகாதயை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கடும் குளிரிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் கிழக்குப்பக்கத்தில், அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் மலையைக் குடைந்து குடவறைக்கோயிலாக உருவாக்கப்பட்டு, தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

17ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் புராண சிறப்புப் பெற்றதாகும். இங்கு கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது அனந்த சயனக்கோலத்தில் அரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி நாளில் இக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும். பல கோயில்களில், வைகுண்ட ஏகாதசி நாளில் சுவாமி உற்சவர் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்புரிவார். நாமக்கல்லில் சுவாமியின் ஜடாரி மட்டுமே சொர்க்கவாசல் வழியாக எடுத்து வருவது சிறப்பாகும்.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 4.15 மணிக்கு கோயில் பட்டாச்சாரியார்கள் சொக்கவாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ஆகம விதிகளின்படி சொர்க்க வாசல் எனும் பரமபாத வாசல் வழியாக சாமியின் ஜடாரி எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி, டிஆர்ஓ சரவணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை நேரத்தில் கடும் பனியிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா, சீனிவாசன், செல்வ சீராளன், ரமேஷ்பாபு, அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா ஆகியோர்  செய்திருந்தனர்.

ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, நாமக்கல் மெயின் ரோடு, கோட்டை ரோடு பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top