மோகனூர் அருகில் உள்ள மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது,
மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழாவில், முதல் நாள் நிகழ்வாக மாரியம்மனுக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது,
2ஆவது நாள் சொக்கநாயகி அம்மனுக்கு தீர்த்தம் கொண்டுவந்து பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
3ஆவது நாள் காலை முனியப்பன் சுவாமிக்கு கிடாவெட்டு விழா நடைபெற்றது, தொடர்ந்து மதியம் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. சுவாமி காவிரி ஆற்றில் இருந்து ஊர்வலமாக வந்து, முக்கிய வீதி வழியாக சிறப்புபூஜை நடைபெற்றது,
தொடர்ந்து மாலை மாவிளக்கு அழைத்து வந்து, கண்கவர் வான வேடிக்கைகள் நடந்தது. பின்னர், கோயிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது, இதில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர்,
திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.




