பரமத்தியில் நடைபெற்ற சவுராஷ்டிரா மத்திய சபையின் செயற்குழு கூட்டத்தில் விரைவில் தஞ்சாவூரில் மாநில மாநாடு நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சவுராஷ்டிரா மத்திய சபையின் செயற்குழு கூட்டம், நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் நடைபெற்றது. சபையின் தலைவர் சுரேந்திரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் அருள்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வருகிற சட்டசபை தேர்தலில் சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கேட்டு, அனைத்து கட்சி நிர்வாகிகளுடம் கோரிக்கை வைப்பது என்றும், எந்த கட்சி வாய்ப்பு அளித்தாலும், அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சவராஷ்டிரா சமூக மக்களும் கலந்துகொள்ளும் வகையில் விரைவில், சவுராஷ்டிரா மத்திய சபையின் சார்பில் தஞ்சாவூரில் சவுராஷ்டிரா சங்கமம் மாநாடு நடத்துவது என்று மற்றொரு தீமானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய சபையின் துணைத்தலைவராகவும், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளாரகவும் சசிரேகா தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. கூட்டத்தில் திரளான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பரமத்தி சபா தலைவர் விஜயகுமார், பொருளாளர் சுரேஷ், சவுராஷ்டிரா ஆன்மீக சபா தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.




