Close
மார்ச் 7, 2026 4:40 மணி

நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் துர்காமூர்த்தி துவக்கி வைத்து கலந்துகொண்டார்.

நாமக்கல்லில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பேரணியை மாவட்ட ஆட்சியர்  துவங்கி வைத்து கலந்துகொண்டார்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி துவக்க விழா, நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து, பேரணியில் நடந்து சென்றார்.

பின்னர் அவர் கூறியதாவது: பொதுமக்களிடம் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும்.

நாமக்கல் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாதம் குறித்த பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நெடுஞ்சாலைகள் துறை, போக்குவரத்து துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வருகின்றன.  அந்த வகையில் இன்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் பேரணி நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.

முன்னதாக அனைவரும் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top