நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம், திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் அமைப்பது தொடர்பாக பொறுப்பு அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டதிக்று மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் (எஸ்சி), சேந்தமங்கலம், (எஸ்டி). நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை திருச்செங்கோடு விவேகானந்தா பெண்கள் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அமைப்பது. எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், போலீஸ் கட்டுப்பாட்டு அறை, வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள், வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறைகளை கண்காணிக்கும் வகையில், அவர்களுக்கான அறையில் டிவிக்கள் அமைத்தல், மின்தடை ஏற்படாமல் இருக்க தேவையான அளவு ஜெனரேட்டர்கள் பொறுத்துதல் ஆகியவை குறித்து பொதுப்பணித்துறை சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவர்களுடன் ஆய்வு மேற்கெண்டு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் டிஆர்ஓக்கள் சரவணன், கண்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர்கள் தினேஷ், லாவண்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




