Close
மார்ச் 7, 2026 2:52 மணி

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக்கோரி, கொல்லிமலை வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், கொல்லிமலை ஒன்றியக் கிளையின் சார்பில், கொல்லிமலை வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் முருக செல்வராசன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சங்க ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகள் குறித்து பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீராம், சங்கர், ஒன்றிய செயலாளர் ரமேஷ்குமார், ஒன்றிய கொள்கை விளக்கச் செயலாளர் சின்னுசாமி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி உள்ளிட்ட திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டு, தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரி கோஷம் எழுப்பினர்.

முடிவில் ஒன்றியப் பொருளாளர் சந்திரன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top