Close
மார்ச் 7, 2026 2:32 மணி

ஓபிசி மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டையில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் மேனாள் காவல்துறை கண்காணிப்பாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் ரத்தின சபாபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பல்லவன் குலம் வடகரையில் உள்ள வீர சைவ பேரவை அலுவலகத்தில் மத்திய மண்டல செயலாளர் சரவண தேவா தலைமையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் பார்க்கவ குல உடையார் சங்க மாவட்ட தலைவர் திருமயம் பெருமாள் உடையார், யாதவ மகாசபை மாவட்ட தலைவர் புதுக்கோட்டை திலக். வீரபாண்டியன், வீர சைவ பேரவை மாவட்ட செயலாளர் திருமயம் கலாதேவி முத்துக்கருப்பன், மத்திய மண்டல பொறுப்பாளர் எம்.சி.கே சின்னத்தம்பி யாதவ், அனைத்து அகமுடையார் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் எஸ்.பி ஆறுமுகம், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க தலைவர் மலையூர் சௌந்தரராஜன்,

கள்ளர் எழுச்சி பேரவை தலைவர் ஆலங்குடி ராமச்சந்திரன், ஓ பி சி மாவட்ட பொறுப்பாளர் இராம சுரேஷ் வர்மன், தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட தலைவர் ஆலங்குடி நந்தகுமார், மருத்துவர் சமூக நல சங்க தலைவர் அறந்தாங்கி ராஜேந்திரன், ஊராளி கவுண்டர் சங்க பொறுப்பாளர் விராலிமலை சக்திவேல்,

வீர சைவ பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் சிவலிங்கம், கந்தர்வகோட்டை ஓபிசி கூட்டமைப்பு பொறுப்பாளர் ஆசிரியர் செல்வராஜ், வீர சைவ பேரவை செயல் தலைவர் ஜெயராஜ், மிரட்டு நிலை வெங்கடாசலம், வீர சைவ பேரவை நிர்வாகிகள் புதுக்கோட்டை கொத்தாளமுத்து, செல்வராஜ், மாரிமுத்து, தியாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தீர்மானம் 1. இக்கூட்டத்தில் ஓபிசி மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திருமயம் சட்டமன்றத் தொகுதி புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி ஆலங்குடி சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

2. எந்தெந்த தொகுதிகளில் எந்த சமூகத்தை சார்ந்த வேட்பாளரை நிறுத்துவது என ஓபிசி தலைமை முடிவு செய்து அறிவிப்பதை அனைத்து சமூக சங்கங்களும் ஏற்றுக்கொண்டு அவர்களின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

3. மத்திய மாநில அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட ஓபிசி மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கு எதிர்வரும் தேர்தலில் நமது எதிர்ப்பை காட்டு வகையில் பிரிந்து நிற்கும் அனைத்து ஓபிசி சமூகங்கள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது

4. மண்டல் கமிஷன் அறிக்கையின் படி மேனாள் பாரத பிரதமர் வி பி சிங் அவர்களால் ஓ பி சி மக்களுக்கு கொடுக்கப்பட்ட 27% இட ஒதுக்கீட்டில் 18 சதவீத இட ஒதுக்கீடு மட்டும் கொடுத்துவிட்டு ஒன்பது சதவீத இட ஒதுக்கீட்டை கொடுக்காமல் மருத்து வரும் நிலையில் ஓபிசி மக்களின் கல்வி வேலை வாய்ப்பு பறிபோகி உள்ளது ஆக ஒன்பது சதவீத இட ஒதுக்கீடு கிடைக்காததின் காரணமாக இதுவரை நாலரை லட்சம் வேலை வாய்ப்பை ஓபிசி மக்கள் இழந்துள்ளனர். இதைப் பற்றி சற்றும் கண்டு கொள்ளாத திராவிட கட்சிகளை கண்டிப்பதோடு ஓபிசி மக்களின் 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறது

5. ஓபிசி ரைட்ஸ் நிறுவனத் தலைவர் சமூக நீதி காவலர் ஐயா இரத்தின சபாபதி அவர்களின் தலைமையில் அனைத்து ஓபிசி சமூக தலைவர்கள் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து முத்தரையர் மக்களின் இட ஒதுக்கீட்டில் BC, MBC, DNC, என பல்வேறு  நிலையில் உள்ளதை போக்கிடும் வகையில் நீண்ட நாள் கோரிக்கையான 22 2 1996 அரசு ஆணை 15 படி ஒரே ஜாதி ஒரே சலுகை வழங்க வலியுறுத்தப்பட்டது

இதே போல் வீர சைவ பேரவை சமூகத்தில் உள்ள குளறுபடிகளையும் நீக்க வலியுறுத்தப்பட்டது ஆனால் இதுவரை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை சம்மந்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து பல்வேறு காலகட்டங்களில் கோரிக்கை மனுவினை வழங்கியும் கிணற்றில் கிடக்கும் கல் போல் உள்ளது இந்த குளறுபடிகளை நீக்கிட தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என வலியுறுத்துகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top