மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்ப திருவிழா நிகழ்ச்சியினை முன்னிட்டு, சிந்தாமணியில் உள்ள கதிர் அறுப்பு மண்டபத்தில் கதிர் அறுப்பு திருவிழா நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கோயில் தெப்பத் திருவிழா நிகழ்ச்சியினையொட்டி, தினமும் பல்வேறு நிகழ்ச்சியில் நடைபெற்றன. இதில், மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது.
அதன் முன்னோட்ட நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் சொக்கநாதருடன் சிந்தாமணியில் உள்ள கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளி கதிர் அறுப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
சிந்தாமணியில், நடைபெறும் கதிர் அறுப்பு திருவிழா நிகழ்ச்சிக்காக மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் பிரியாவிடை ஆகியோர் பல்லாக்கு வாகனத்தில் கோவிலில் இருந்து கீழமாசி விதி விளக்குத்தூண் வழியாக சிந்தாமணி கிராமத்தை அடைந்தனர்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் வருகையொட்டி வழியெங்கும் திருக்கண் மண்டகப்படி அமைத்து மீனாட்சி சொக்கநாதர் வரவேற்றனர்.
சிந்தாமணி விவசாயிகள் தை மாதம் கதிர் அறுப்பதற்கு முன்னர் அருள்மிகு மீனாட்சி அம்மன் வருகை தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கதிர் அறுத்து கதிர் அறுக்கும் பணியை தொடங்கி வைப்பார்.
சிந்தாமணியில் உள்ள பழமை வாய்ந்த கதிர் இருப்பு மண்டபத்தில் எழுந்தருளி கதிர் அறுப்பு செய்யும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இதனை அடுத்து, சிந்தாமணி சாமநத்தம் வில்லாபுரம் அவனியாபுரம் பனையூர் விரகனூர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர் .




