Close
மார்ச் 7, 2026 4:23 மணி

திருவண்ணாமலையில் வன தீ தடுப்பு ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் திருவண்ணாமலை வனக்கோட்டம் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்கேற்கும் வன தீ தடுப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோடை காலம் துவங்கவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வன பகுதிகளில் தீ ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வனத்துறை, காவல்துறை, வருவாய் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகியோருடன் தீ தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்த நிலப்பரப்பில் 23% காடுகள் உள்ளது. ஒரு இலட்சத்து 43 ஆயிரம் ஹெக்டர் காடுகள் உள்ளது. பொதுவாக காட்டு தீயானது இயற்கையாகவும் செயற்கையாகவும் ஏற்படுகிறது. 98% வனத்தில் ஏற்படும் தீயானது செயற்கையான முறையில் உருவாக்கப்படுகிறது. வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வனப்பகுதிகளில் உள்ளதால் காட்டு தீ ஏற்பட்டால் அவர்கள் வாழ்வாதாரம் மற்றும் விலைமதிப்பில்லாத அரியவகை மரங்கள் பாதிக்கப்படும்.

மேலும் கடந்த காலங்களில் தீ விபத்து ஏற்பட்ட இடங்களில் அனைத்து துறையினரும் ஒருங்கினைந்து கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும். வனத்தில் ஏற்படும் தீயை கண்காணித்து தகவல் தெரிவிக்கும் வகையில் வன பாதுகாவலர்கள் மற்றும் வனப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை இணைத்து கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வனத்தை ஒட்டி விவசாய நிலங்களில் காய்ந்த விவசாய மிச்சங்களை எரிக்கக் கூடாது. வனப்பகுதிகளில் வசிக்கும் கிராம பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் தீ தடுப்பு கோடுகள் அமைக்க வேண்டும் என்றும் தீயனைப்பு உபகர ணங்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படாமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாவட்ட வன அலுவலர் சுதாகர், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி, அம்ருதா எஸ்.குமார் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், வட்டாட்சியர்கள் வனத்துறையினர் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top