Close
மார்ச் 7, 2026 6:03 மணி

நாமக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்: வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாளை முதல்வர் திறப்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ. 1,000 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார்.

இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத திட்டங்களை, கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கடந்த 5 ஆண்டுகளில் பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராசிபுரம் மற்றும் வழியோர கிராமங்களில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 854.37 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதையொட்டி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை இன்று 5ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் ராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 523 ஊரக குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

இத்திட்டத்தின் மூலம் நகரப் பகுதிகளில் வசிப்போருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீரும், ஊரகப்பகுதிகளில் வசிப்போருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டம் குடிநீரும் வழங்கப்படும்.

திமுக ஆட்சியில், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் 2ஆக பிரிக்கப்பட்டு, நாமக்கல் ஆவின் தனியாக துவக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மோகனூர் ரோட்டில் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நாமக்கல் ஆவினுக்காக, அதிநவீன பால்பண்ணை ரூ. 90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பால் பண்ணை நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்டது. இந்த பண்ணையில் நாள் ஒன்றுக்கு தேவையான பால் பாக்கெட்டுகள், 10 ஆயிரம் லிட்டர் தயிர், 1,000 கிலோ வெண்ணெய் மற்றும் 200 கிலோ பால் கோவா உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதன் மூலம் ஒரு லிட்டர் பாலுக்கு சேலம் ஆவினுக்கு செலுத்தப்பட்டு வந்த ரூ. 3.50 நாமக்கல் ஆவினுக்கு கூடுதல் லாபமாக கிடைக்கும். நாமக்கல் ஆவின் பால் பண்ணை மூலம் 15 ஆயிரம பால் உற்பத்தியாளர்கள் கூடுதல் போனஸ் பெறுவார்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் நுகர்வோர்கள் பயன் பெறுவார்கள்.

காவிரி கரையில் அமைந்திருந்தாலும் மோகனூர் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்து. இதை தீர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையொட்டி, அம்ரூத். 2.0 திட்டத்தின் கீழ் மோகனூர் பேரூராட்சி பகுதிக்கு தனியாக ரூ. 23 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 4,637 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகியும், நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள போதமலைக்கு ரோடு வசதி இல்லாததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மிகவம் பாதிக்கப்பட்டனர். மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று போதமலைக்கு ரூ 94 கோடி மதிப்பில் புதிய மலைப்பாதை அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்நது பணிகள் துவக்கப்பட்டு இதுவரை ரூ. 34.12 கோடி மதிப்பில் புதுப்பட்டி முதல் கெடமலை 9.90 கி.மீ. தூரத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ. ஆயிரம் கோடிக்கும் அதிகமான திட்டப்பணிகளை சென்னையில் இருந்து, நாளை 5ம் தேதி காலை முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைக்கிறார். இதையொட்டி நாமக்கல் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏ ராமலிங்கம் மற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top