நாமக்கல் புதிய பத்திரப்பதிவு அலுவலகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சில் திறந்து வைத்தார்.
நாமக்கல் மோகனூர் ரோட்டில், தாலுகா அலுவலக வளாகத்தில் ஏற்கனவே இயங்கி வந்த பத்திரப்பதிவு துறையின் ஜாயின்ட் 2, பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம் பழுதடைந்ததால் அதை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அலுவலகம் தற்காலிகமாக பரமத்திரோட்டில், காவேட்டிப்பட்டியில் இயங்கி வந்தது.
நாமக்கல் ஜாயின்ட் 2 இணை சார்பதிவாளர் அலுவலகம் கட்டுமானப்பணிகள் முடிவுற்ற நிலையில், சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங்கில் திறந்து வைத்தார்.
இதையொட்டி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி குத்துவிளக்கேற்றி வைத்து அலுவலகப் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்சியில் சேலம் துணைப்பதிவுத்துறை தலைவர் சுபிதாலட்சுமி, நாமக்கல் உதவிப் பதிவுத்துறை தலைவர் பூங்கொடி, மாவட்ட பதிவாளர் (தணிக்கை) சிவகுமார், ஜாயிண்ட் 2, இணை சார்பதிவாளர் மனோகரன், மாநகராட்சி திமுக கொறடா சிவகுமார், ராணா ஆனந்த் மற்றும் பத்திர எழுத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்




