Close
மார்ச் 7, 2026 2:51 மணி

என் ஊர், என் கனவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் என் ஊர், என் கனவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசின் ” என் ஊர், என் கனவு” VISION 2030 என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறந்த கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டவும் மற்றும் இம்மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்க பிரதிநிதிகள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவனர்கள்,வணிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதாவது: த

ருகிறது. மேலும் அனைத்து மாவட்டத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தொலைநோக்கு திட்டம் 2030 தயார் செய்ய ஏதுவாக மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கல்வி, தொழில்துறை, தொழில்நுட்பம், வேளாண்மை, விளையாட்டு, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய தன்னார்வலர்கள், வல்லுநர்கள், சாதனையாளர்கள், இன்புளுயன்சர்ஸ் உள்ளிட்டவர்களை கொண்டு “என் ஊர், என் கனவு” என்கிற மாவட்ட அளவிலான நிகழ்ச்சியை நடத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் என் ஊர், என் கனவு திட்டத்தின் கீழ் தொலைநோக்கு திட்டம் 2030 தயார் செய்ய ஏதுவாக நடத்தப்படும் இக்கூட்டத்திற்கு வருகை தந்துள்ள பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்கள், அனைத்து சங்க பிரதிநிதிகள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நமது மாவட்டத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் தெரிவித்தார்.

தொடர்ந்து இக்கூட்டத்தில் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த அனைத்து சங்க பிரதிநிதிகள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவனர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் “என் ஊர், என் கனவு” திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

தொலைநோக்கு திட்டம் 2030 தயார் செய்ய ஏதுவாக என் ஊர், என் கனவு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இக்கூட்டத்தில் பெறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.ஆர்.மணி, இணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) பார்திபன், வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ், .உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. அம்ருதா எஸ் குமார், துணை ஆட்சியர் ( பயிற்சி) சந்தோஷ் குமார் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top