மார்ச் 1ம் தேதி, தமிழக முதல்வர் பிறந்த நாளில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தங்க மோதிரம் அணிவிப்பது என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம், மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., முன்னிலை வகித்துப் பேசினார். கூட்டத்தில் எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி துணை மேயர் பூபதி, பாலசந்திரன், ஆனந்த பாபு, நலங்கிள்ளி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வருகிற மார்ச் 1ம் தேதி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு மாவட்ட திமுக சார்பில் தங்க மோதிரம் அணிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டடது.
மேலும், கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிகளில் வார்டு வாரியாக திமுக கொடியேற்றி நலத்திட்ட வழங்குவது. பிப். 27ம் தேதி கோவையில் நடைபெறும் பூத் ஏஜெண்டுகள் மாநாட்டில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் இருந்து 8858 பேர் கொள்வது. நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சிகளில் உள்ள பாகம் வாரியாக வீடு தோறும் வெல்லும் தமிழ் பெண்கள் இயக்கத்தின் கீழ், மகளிர் அணியை சார்ந்த 8,990 பேர் பிப்ரவரி 23ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை பரப்புரை மேற்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் திரளான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.




