Close
ஏப்ரல் 23, 2026 11:37 மணி

விலை கொடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பவர்களை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும்: லோக் ஆயுக்தா உறுப்பினர்

நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில், தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நீதிபதி ராமராஜன் பேசினார்.

விலை கொடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பவர்களை, பொதுமக்கள் தேர்தலில் நிராகரித்து, உண்மையான ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நீதிபதி ராமராஜ் பேசினார்.

நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில், வாக்காளரியலின் அவசியமும் கொள்கைகளும் என்ற தலைப்பில், கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் அருண் தலைமை வகித்தார். தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நீதிபதி ராமராஜ், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:

வாக்கு என்பது உச்ச அதிகாரம் மற்றும் ஜனநாயக அரசாங்கத்தின் தன்மையையும், உலகப் போக்குகளையும் தீர்மானிக்கும் ஒரு சக்தி. வாக்களிப்பு என்ற கருத்து, தேர்தல் ஜனநாயகத்தின் முதல் அடித்தளமாகும்.

உண்மையான ஜனநாயகத்தை காப்பாற்ற, விலை கொடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பவர்களை, வாக்காளர்கள் தேர்தலில் நிராகரிக்க வேண்டும். வாக்காளர்கள் மற்றும் வாக்காளர்களின் விருப்பத்தையும், நேர்மையையும் முன்னுரிமைப்படுத்துவது ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக, வாக்காளர்கள் அறியாமை மற்றும் ஊழலை தேர்தல் செயல்முறையிலிருந்து வேரறுக்க வேண்டிய கூட்டுக் கடமை குடிமக்களுக்கு உள்ளது.

தேர்தல் நிர்வாக அமைப்புகள், அரசாங்க அதிகாரத்தின் நான்காவது கிளையாக சட்டமன்றம், செயல் துறை அரசாங்கம் மற்றும் நீதித்துறைக்கு சமமான அரசியலமைப்பு அந்தஸ்துடன் சுதந்திரமானதாக உருவாக்கப்பட வேண்டும்.

உண்மையான ஜனநாயகத்துக்கும், நாட்டின் நல்லாட்சிக்கும், உலகின் அமைதிக்கும், வாக்காளரியல் சிறந்த பாதையாகும். தேசிய தேர்தல் மேலாண் அமைப்புகளை மேம்படுத்துவதற்கும், தகவலறிந்த வாக்காளர்களை உருவாக்குவதற்கும், சர்வதேச சட்டங்களையும், நிறுவனங்களையும் ஐ.நா சபை உருவாக்க வேண்டும்.

வாக்காளரியல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நடைமுறையை, தனிக்கல்வித்துறையாக உருவாக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலானவர்கள் வாக்காளர்களே என்பதே, வாக்காளரிசத்தின் மையக் கருத்தாகும்.

வாக்காளரியல் கோட்பாடுகளைப் பொதுமக்களிடையே பரப்புவதே வாக்காளரியலின் பணி. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்சியில் திரளான ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top