மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் பத்தாம் ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பூத்தட்டு ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பேட்டை கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் பால்குடம் ஊர்வலம் வந்தது வழிநெடுக பக்தர்கள் பொதுமக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்
தொடர்ந்து வீரமாகாளி அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக வீரமாகாளி அம்மனுக்கு பால், தயிர், வெண்ணெய், மஞ்சள், மா பொடி, திரவிய பொடி, பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக குழு மற்றும் பேட்டை கிராமத்தினர் செய்திருந்தனர்.




