நாமக்கல் மாவட்டத்தில் வருகிற மார்ச் 2, 3 தேதிகளில் தகுதியான பொதுமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
இது குறித்து கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, மாதம்தோறும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வருகிற மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் தகுதியானவர்களின் வீடுகளுக்கு நேரிடையாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இந்த 2 நாட்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது.




