Close
மார்ச் 7, 2026 11:29 காலை

முதுகலை மற்றும் பிஎச்.டி., படிக்கும் மாணவருக்கும் இலவச லேப்டாப் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கல்லூரிகளில் முதுகலை மற்றும் பிஎச்டி., படிக்கும் மாணவர்களுக்கும், தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கக் கோரி, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரிகளில் முதுகலை மற்றும் பிஎச்.டி டாக்டர் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழக அரசு இலவச லேப்டாப்புகளை வழங்க வேண்டும் எனக்கோரி, நாமக்கல் அரசு கல்லூரி முன்பு மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக, உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின்படி, முதல்கட்டமாக, கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதில், அரசு இன்ஜினியிங், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில் நுட்பக் கல்லூரி, தொழில்துறை பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சேர்ந்த மாணவ, மாணவியருக்கும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், முதுகலை பட்டம் மற்றும் பிஎச்.டி டாக்டர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்புகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய மாணவர் சங்க மாவட்ட இணை செயலாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். தமிழகம் முழுவதும் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கக்கூடிய கல்லூரி மாணவர்களுக்கு, உலகம் உங்கள் கையில் திட்டத்தில், இலவச லேப்டாப்புகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை, முதுகலை மற்றும் பி.எச்டி., டாக்டர் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி இலவச லேப்டாப்புகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top