Close
மார்ச் 9, 2026 11:12 மணி

கவிஞர் கண்ணதாசன் பேரவை, தூய்மை அருணை சார்பில் உலக மகளிர் தினவிழா

திருவண்ணாமலையில் தனியார் திருமண மண்டபத்தில் கவிஞர் கண்ணதாசன் பேரவையின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் உலக மகளிர் தினவிழா நடைபெற்றது. கவிஞர் கண்ணதாசன் பேரவை தலைவரும் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் மோகன் தலைமை தாங்கினார். பேரவை செயலாளர் மகேந்திரன் பேரவை பொருளாளர் பார்த்திபன், துணைதலைவர் பாண்டுரங்கன், துணை செயலாளர் பூபதி சட்டஆலோசகர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் கவிஞர் ஆ.தே.முருகையன் விழா துவக்கவுரையாற்றினார். கவிஞர் கண்ணதாசன் பேரவை சார்பில் உலக மகளிர் தினவிழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பிரச்சார செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம் கலந்து கொண்டு 300 மகளிர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்,

அப்போது அவர் பேசியதாவது: உலகில் அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்களும் அதிகளவில் பங்கு பெற்று வருகிறார்கள். அதில் அதிகளவில் தமிழ்நாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை வழிநடத்துவதன் மூலம் சிறந்து விளங்குகிறார்கள். மேலும் பெண்கள் அதிக முக்கிய பதவிகளில் வந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமைசேர்த்திடவேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

மகளிர் தினவிழாவில் கவிஞர் கண்ணதாசனின் அறிவாற்றல் இலக்கிய ஆற்றல் பாடல் ஆசிரியர் கவிதையாளர் பன்முகம் கொண்ட கவிஞர் கண்ணதாசனைப் பற்றிய பாடல்களும் சிறப்பம்சங்களை பற்றி பெண்களிடையே திமுக தலைமை கழக பேச்சாளர் ஆரணி மாலா, கழக இளம்பேச்சாளர் தமிழரசி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

விழாவில் மதிமுக மாநில தணிக்கைக்குழு உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான எஸ்.எம்.பாசறை பாபு, சிபிஐ மாநில மற்றும் மாவட்ட பிரச்சார குழு உறுப்பினர் ஜோதி, தமிழ்நாடு கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் தேவிகாராணி, கவியரசு கண்ணதாசன் தமிழ்சங்கம் மோகன், இளம்பேச்சாளர் போக கலைச்செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இறுதியில் பேரவை துணை செயலாளர் பூபதி (எ) ஏழுமலை நன்றியுரையாற்றினார்.

தூய்மை அருணை

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில் மகளிர் தின விழா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு மகளிர் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகளை தமிழ்நாடு அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பிரச்சார செயலாளர், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர், ஏ.ஏ. ஆறுமுகம், வழங்கி மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் தூய்மை காவலர்கள் தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top