Close
மார்ச் 16, 2026 12:50 மணி

தேர்தல் விதி அமல்: உசிலம்பட்டியில் அகற்றப்படும் பல்வேறு அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற உள்ள சூழலில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததது

இதனையடுத்து மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர்மன்றத் தலைவர் அலுவலகம் நகராட்சி ஆணையாளர் இளவரசன் தலைமையில் அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் மூலம் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள தமிழக முதல்வர் படங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் கொண்ட புகைப்படங்கள் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் பொது இடங்களில் பேருந்து நிறுத்தங்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் போஸ்டர்களும் அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top