நாமக்கல் மாவட்டத்தில் வருகிற ஆக. 4, 5ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இது குறித்து கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;
நாமக்கல் மாவட்டத்தில் வீடுதோறும் ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், ரேஷன் கடை பணியாளர்கள் மூலம், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வருகிற ஆக. 4 மற்றும் 5 தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




