Close
ஏப்ரல் 23, 2026 9:47 மணி

உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக ஐ. மகேந்திரன்: அதிமுக கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

உசிலம்பட்டி அதிமுக வேட்பாளர் மகேந்திரன்

தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மார்ச் 15ம் தேதி அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் , வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது.

அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் மார்ச்-30ம் தேதி துவங்கி ஏப்ரல் 6ம் தேதி முடிவடைகிறது. வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7ம் தேதியும் வேட்பு மனு திரும்பப் பெற ஏப்ரல் 9ம் தேதியும் நடைபெறும்

அதிமுக சார்பில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டது. இதில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளரும் உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ஐ. மகேந்திரன் அறிவிக்கப்பட்துள்ளார்.

இதனையடுத்து உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நகர செயலாளர் பூமாராஜா தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து, எடப்பாடியார் வாழ்க, புரட்சித்தலைவி அம்மா வாழ்க, வெற்றி வேட்பாளர் ஐ.மகேந்திரன் வாழ்க என கோஷமிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top