Close
ஏப்ரல் 23, 2026 8:15 மணி

சிபிஎம்- பாஜ ரகசிய ஒப்பந்தம்: அபத்தமானது என்கிறார் பினராயி விஜயன்!

கேரள சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, மார்க். கம்யூ கட்சி மற்றும் பா.ஜ இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாக காங். சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை முதல்வர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார்.

காங் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், கேரளாவில் சிபிஎம் மற்றும் பாஜ இடையே கூட்டணி இருப்பதாகக் குற்றம் சாட்டினார். கே.சி. வேணுகோபால் கூறுகையில், இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலை உன்னிப்பாகக் கவனித்தால், சில தொகுதிகளில் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செயல்படுவது புரியும். இ.டி போன்ற மத்திய ஏஜென்சிகளுக்குப் பயந்து, பிரதமர் மோடிக்கு எதிராகப் பேச பினராயி விஜயன் தயங்குகிறார். கேரளா தனது கையை விட்டுப் போய்விடும் என்ற அச்சத்தில், சிபிஎம் தலைமை பாஜகவுடன் நெறியற்ற அரசியல் உடன்பாட்டைச் செய்துள்ளது என்று கூறினார்

இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், காங். தலைவர் வேணுகோபாலின் புகார்கள் அடிப்படையற்றவை மற்றும் அபத்தமானவை. 1971-ல் பாலக்காட்டில் ஏ.கே. கோபாலன் போட்டியிட்டபோது, ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற வேட்பாளரை காங். நிறுத்தியது. ஆர்எஸ்எஸ் அமைப்புடன் கைகோர்ப்பதில் காங்.கிற்கு நீண்ட கால வரலாறு உண்டு. நேமம் தொகுதியில் பாஜ கணக்கைத் தொடங்க உதவியது காங். தான், திருச்சூர் லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸின் வாக்குகள் கசிந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. பா.ஜவின் உண்மையான அரசியல் எதிரி இடதுசாரிகள்தான். காங். தனது சொந்த அரசியல் தோல்விகளை மறைக்கவே இத்தகைய புகார்களை முன்கூட்டியே கிளப்புகிறது என்றார்.

இந்த மும்முனைப் போட்டியில், ஆளும் இடதுசாரி அரசுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் மூண்டுள்ளது தேர்தல்களத்தைச் சூடாக்கியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top