Close
ஏப்ரல் 24, 2026 3:56 காலை

சோழவந்தான் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக மூன்றாவது முறையாக முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ந்தேதி சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக, அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில்,  சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர்இராமநாதபுரம் மாவட்டம் அரசியல் கட்சிக்கொடிகளின் சுவடுகள் இல்லாத குக்கிராமம் ஆலங்குளத்தில் 09.08.1965ஆம்ஆண்டு எளிய விவசாய குடும்பத்தில் கிழவன் ஆறுமுகம் தம்பதியினரின் மகனாக பிறந்தார். டி.எம்.இ. இயந்திர பொறியியல் பட்டயக் கல்வி பயின்றுள்ளார்.

இவருக்கு, மகாலட்சுமி என்ற மனைவியும், ஆதிராப்ரித்தி என்ற மகளும், கிஷேர் வெங்கட் என்ற மகனும் உள்ளனர். மனைவி ஆயள்காப்பீட்டு கழகத்தில் பணி செய்துவருகிறார். மகள் எம்.பி.பி.எஸ். எம்.டி. முடித்து மருத்துவராக உள்ளார். மகன் பி.காம் படித்துள்ளார்.

மதுரை கே.புதூர் சர்வேயர் காலனியிலிருந்து அ.இ.அ.தி.மு.க.வில் அரசியல் வாழ்க்கையை 1990ஆண்டு முதல் உறுப்பினராக சேர்ந்து தொடங்கினார். அதன்பின் கழகம் அறிவித்த அனைத்து போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல், பொதுக்கூட்டங்கள் என்று அனைத்திலும் கலந்துகொண்டு தீவிர அரசியல்வாதியானார்.

ஆண்டுதோறும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாக்களில் இரத்ததான முகாம் நடத்துவது, ஏழை, எளியோர், மாணவர்கள், விதவைகள், மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள், உணவுகள், மருத்துவ முகாம்கள் மூலம் மருந்து,மாத்திரை வழங்குவது என்று தனது மக்களின் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மேலும், தி.மு.க.ஆட்சிகாலத்தில்  முல்லை பெரியாறு அணைப்பிரச்சனையில் சாதனை படைத்த ஜெயலலிதாவிற்கு நடந்த பாராட்டுவிழா பொதுக்கூட்டத்திற்கு மதுரை ரிங்ரோட்டில் இடம் தந்து உதவிய
ஊக்கத்திற்காக 2011ல் ஜெயலலிதா அவருக்கு மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளராக பொறுப்பு வழங்கினார்.

அதன்பின் 2016ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் கோட்டையான சோழவந்தான் தொகுதியில் முதன்முதலாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பின் மதுரை புறநகர் மாவட்ட துணைச்செயலாளராக பொறுப்பேற்றார். மேலும் ,சமூகபணிக்காக குளோபல் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தற்போது அ.தி.மு.க.வின் 11 பேர்கொண்ட வழிகாட்டுகுழுவில் உறுப்பினராகவும், தேர்தல் பிரச்சாரக்குழுவில் உறுப்பினராகவும் பணிசெய்து வருகிறார்.

மேலும், சோழவந்தான் தொகுதியில் இதுவரை யாரும் செய்யாத ஏராளமான நலத்திட்டங்களும், கொரோனா ஊரடங்கில் 2 மாதம் தொடர்ந்து ஏழை, எளியோருக்கு உணவளித்தும் தொகுதி மக்களுக்கு அரிசி, பலசரக்கு, காய்கறி தொகுப்புகள் வழங்கினார். அதன்பின் 2021 சட்டமன்றதேர்தலில் மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றிவாய்பை இழந்தார்.

தற்போது மூன்றாவது முறையாக 2026 சட்டமன்றதேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top