Close
ஏப்ரல் 24, 2026 3:56 காலை

பங்குனி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம், சிறப்பு ரயில் அறிவிப்பு

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபடுவார்கள்.

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.

அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

அனைத்து நலன்களையும் தரக் கூடியது பெளர்ணமி கிரிவலம். எதை நினைத்து செல்கிறோமோ அதை நிறைவேற்றி, அத்தனை நலன்களையும் தரக் கூடியது.

வாழ்நாளில் ஒருமுறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். வேண்டியது அனைத்தையும் இறைவன் நிறைவேற்றி தருவார். வறுமையின் பிடியில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் மிக உயர்ந்து நிலைக்கு செல்ல முடியும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.

14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட திருவண்ணாமலை, மலையில் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவர். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.

பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

இந்தநிலையில், பஞ்சபூத தலங்களில் அக்னிததலமாக கருதப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், பக்தர்களுக்கு பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்குனி மாதப் பெளா்ணமி   ஏப்ரல் 1.04.2026 காலை 07:36 மணிக்கு தொடங்கி 2ம் தேதி காலை 07:56  மணிக்கு பௌர்ணமி நிறைவு பெறுகிறது.

இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே வரும் ஏப். 1 புதன்கிழமை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் விடுத்த செய்திக் குறிப்பில், திருவண்ணாமலை பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 1- ஆம் தேதி காலை 10.10 மணிக்கு விழுப்புரத்திலிருந்து முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (எண் 06130) புறப்பட்டு காலை 11.15 மணிக்கு திருவண்ணாமலையைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து அன்று நண்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரத்தைச் சென்றடையும்.

சிறப்பு ரயில்களில் 18 மெமு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பலப்பட்டு, அய்யாண்டூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top