தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் , வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் நேற்று மார்ச்-30 ந் தேதி முதல் துவங்கி ஏப்ரல் 6 ந் தேதி முடிவடைகிறது.
வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7 தேதியும் வேட்பு மனு திரும்பப்பெற ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாளாகும்.
இந்த சூழலில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராக எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று, உசிலம்பட்டிக்கு வருகை தந்த எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கத்திற்கு தேவர் சிலை முன்பு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.,
தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.கே. மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வருங்கால முதலமைச்சர் விஜய் வெற்றி சின்னம் விசில் என கோஷங்கள் எழுப்பினர்., லித்திக் புகழ் என்ற சிறுவன் நெற்றியில் விஜய்யின் தவெக கொடி சின்னத்தை நெற்றி பொட்டாக வைத்து வந்தது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.




