உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சரவணக்குமார், கூட்டணி கட்சியினரின் படை சூள ஊர்வலமாக வந்து இன்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமாரிடம் வழங்கினார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30ம் தேதி துவங்கி இன்று நிறைவடைகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நலக் கூட்டணி கூட்டணி சார்பில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சரவணக்குமார், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமாரிடம் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரவணக்குமார் கூறுகையில், இன்று, கூட்டணி கட்சிகளின் ஊர்வலத்தின் மூலமே எனது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது., கூட்டணி கட்சிகளின் பலத்தோடு அமோக வெற்றியை பெறுவேன் என தெரிவித்தார்.




