மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
ஆதனூர் கிராமத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளருக்குபொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்தூவி வரவேற்றனர். பின்னர் பேசிய வேட்பாளர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்களிடம் அமைச்சர் மூர்த்தி ஆலோசனையின் பேரில் நமது தொகுதிக்கு பல நல்ல போல் எண்ணற்ற திட்டங்களை வாங்கி கொடுத்துள்ளோம்
அரசு கட்டிடங்கள், கிராமத்து சாலைகள், தூய்மையான குடிநீர், சிக்கலான சாலைகளை கடந்து செல்ல தரமான பாலங்கள் அமைத்து கொடுத்துள்ளோம். மகளிர் திட்டமான விடியல் பயணம் மகளிர்க்கு ரூபாய் ஆயிரம் என்று பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி காட்டியுள்ளோம்
மக்களுக்காக இரவு பகல் பாராமல்உழைத்துக் கொண்டிருக்கின்றோம், 23ஆம் தேதிநடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு அதிகப்படியான வாக்குகளை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் தேவசேரி, முடுவார்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, பாரைப்பட்டி, கோடாங்கிபட்டி, பொந்துக்கம்பட்டி, பள்ளப்பட்டி, உசிலம்பட்டி, 66,மேட்டுப்பட்டி, சேந்தமங்கலம் ஆகிய கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரித்த அவருக்கு திமுக கட்சிமற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து ஆளுயர மாலை கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் தனராஜ் பரந்தாமன் முத்தையன் அருண்குமார், முன்னாள் யூனியன் தலைவர் ராம்குமார், ஒன்றிய துணைச் செயலாளர். கார்த்திகேயன், ஒன்றிய பொருளாளர் சுந்தர், முன்னாள் யூனியன் துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனுஷ்கோடி, காயத்ரி இதயச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் யோகேஷ், துணை அமைப்பாளர் சின்னஊர்சேரி ஆனந்த், நிர்வாகிகள் ஏகேடி தெய்வம், கோவிலூர் செந்தில்குமார், சின்னஊர்சேரி தியாகு, குமரேசன், எம்எம்.சரவணன், வேல்முருகன், ஆதனூர் கிராமத்தில் கிளைச் செயலாளர் அன்பு டிவிஎஸ் சுப்பிரமணி தமிழ்வேந்தன் அதனைத் தொடர்ந்து மந்தை திடலில் ராஜாங்கம்இன்ஜினியர் முருகன் கிருஷ்ணமூர்த்தி பழக்கடை முருகன், முத்துக்குமார், சின்னத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்றனர்




