Close
ஜூன் 6, 2026 1:33 காலை

சிபிஎஸ்சி 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளிமாணவர்

இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 24.95 லட்சம் மாணவ, மாணவிகள் சிபிஎஸ்சில் கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு எழுதினர். அதனடிப்படையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஶ்ரீசைதன்யா டெக்னோ பள்ளியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் 86 சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் இந்த தேர்வுகளுக்கான முடிவுகளை சிபிஎஸ்சி வெளியிட்டது. இதில் ஶ்ரீசைதன்யா பள்ளியின் கனிஷ் என்ற மாணவன் 496 மதிப்பெண் பெற்று திருவண்ணாமலை மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார்.

இப்பள்ளியில் தேர்வு எழுதிய 86 மாணவர்களில் 57 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ் பாடப்பிரிவில் 6 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்ணும், அறிவியல் பாடப்பிரிவில் 1 மாணவர் 100க்கு 100 மதிப்பெண்ணும், சமூக அறிவியல் பாடப்பிரிவில் 2 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்ணும், தொழில்நுட்ப அறிவியல் பாடப்பிரிவில் 2 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களைபள்ளி முதல்வர் அமலி பிரசில்லா, கல்வித்துறை தலைவர் பாபு மாதேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top