Close
மே 30, 2026 11:32 மணி

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் பரவலான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், நாளை 31ம் தேதி முதல் 4 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, வானிலை முன் அறிவிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த வாரம், பகல் நேர வெப்பநிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் இரவு நேர வெப்பம் 80.6 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் நிலவியது. மே 31ம் தேதி முதல் ஜூன் 3ம் @ததி வரை 4 நாட்கள், அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை 93.2 டிகிரி முதல் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.

குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை 73.4 டிகிரி ஃபாரன்ஹீட் முதல் 78.8 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும். 4 நாட்கள் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 60 முதல் 80 சதவீதம் வரை இருக்கும். காற்று மேற்கு திசையில் இருந்து, மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

மாவட்டத்தில் நாளை 31ம் தேதி 26 மி.மீ., ஜூன் 1ம் தேதி 25 மி.மீ., 2ம் தேதி 25 மி.மீ, 3ம் தேதி 3 மி.மீ. அளவில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top