Close
ஜூன் 16, 2026 4:28 மணி

ஐபிஎஸ் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசின் உள்துறை (காவல் துறை) முதன்மைச் செயலாளர் கே. மணிவாசன், ஐஏஎஸ், அவசர அரசாணை ஒன்றை இன்று (15.06.2026) வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 56 காவல் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (SP) மட்டத்தில் இந்த அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • சேலம் மாவட்டம்: தர்மபுரி மாவட்ட எஸ்பியாக இருந்த எஸ்.எஸ். மகேஸ்வரன், ஐபிஎஸ், சேலம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருவண்ணாமலை மாவட்டம்: சென்னை டிஜிபி அலுவலக தலைமையக ஏஐஜியாக இருந்த ஏ.கே. அருண் கபிலன், ஐபிஎஸ், திருவண்ணாமலை மாவட்ட புதிய எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
  • திருவள்ளூர் மாவட்டம்: விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக இருந்த வி.வி. சாய் பிரணீத், ஐபிஎஸ், திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • விழுப்புரம் மாவட்டம்: மதுரை மாநகர வடக்கு துணை ஆணையராக இருந்த எஸ். மதிவாணன், ஐபிஎஸ், விழுப்புரம் மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திண்டுக்கல் மாவட்டம்: கடலூர் மாவட்ட எஸ்பியாக இருந்த எஸ். ஜெயக்குமார், ஐபிஎஸ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • கடலூர் மாவட்டம்: திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக இருந்த விவேகானந்த சுக்லா, ஐபிஎஸ், கடலூர் மாவட்ட எஸ்பியாகப் பொறுப்பேற்கிறார்.
  • திருப்பூர் மாவட்டம்: திருச்சி மாநகர தெற்கு துணை ஆணையராக இருந்த ஸ்ரீஸ்தி சிங், ஐபிஎஸ், திருப்பூர் மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நாமக்கல் மாவட்டம்: திருப்பூர் மாவட்ட எஸ்பியாக இருந்த யாதவ் கிரீஷ் அசோக், ஐபிஎஸ், நாமக்கல் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • விருதுநகர் மாவட்டம்: சேலம் மாவட்ட எஸ்பியாக இருந்த கௌதம் கோயல், ஐபிஎஸ், விருதுநகர் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
  • தர்மபுரி மாவட்டம்: சென்னை டிஜிபி அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜியாக இருந்த ஜி.எஸ். அனிதா, தர்மபுரி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கிருஷ்ணகிரி மாவட்டம்: கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த பி. தங்கதுரை, ஐபிஎஸ், அதே மாவட்டத்திற்குள் மறு உத்தரவு பெற்றுள்ளார்.
  • மதுரை மாவட்டம்: கோவை மாநகர வடக்கு துணை ஆணையராக இருந்த என். தேவநாதன், மதுரை மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தேனி மாவட்டம்: சேலம் மாநகர தெற்கு துணை ஆணையராக இருந்த சுப்ரமண்ய கேட்கர் பாலசந்திரா, ஐபிஎஸ், தேனி மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருநெல்வேலி மாவட்டம்: அரியலூர் மாவட்ட எஸ்பியாக இருந்த விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி, ஐபிஎஸ், திருநெல்வேலி மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மயிலாடுதுறை மாவட்டம்: தேனி மாவட்ட எஸ்பியாக இருந்த டாக்டர் புக்யா சினேகா பிரியா, ஐபிஎஸ், மயிலாடுதுறை மாவட்ட புதிய எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
  • அரியலூர் மாவட்டம்: சென்னை பொருளாதார குற்றப்பிரிவு (வடக்கு மண்டலம்) எஸ்பியாக இருந்த எஸ். செல்வகுமார், ஐபிஎஸ், அரியலூர் மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் துறை மாற்றங்கள்

சென்னை மாநகரத்தின் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவுகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

  • கட்டாயக் காத்திருப்பில் இருந்த ஈ.எஸ். உமா, ஐபிஎஸ், சென்னை மாநகர காவல் தலைமையகத்தின் புதிய துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை டி. நகர் துணை ஆணையராக இருந்த எஸ். குதாலிங்கம், சென்னை மத்திய குற்றப்பிரிவு-II ( துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை கொளத்தூர் துணை ஆணையராக இருந்த பி. குமார், சென்னை டி. நகர் புதிய துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  • கட்டாயக் காத்திருப்பில் இருந்த எஸ். ராஜேஷ் கண்ணன், ஐபிஎஸ், சென்னை கொளத்தூர் பகுதி புதிய துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக இருந்த கே. முத்து குமார், சென்னை மாநகர போக்குவரத்து (தெற்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  • தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையராக இருந்த சமே சிங் மீனா, ஐபிஎஸ், சென்னை புளியந்தோப்பு பகுதி புதிய துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கட்டாயக் காத்திருப்பில் இருந்த டாக்டர் கே. பிரபாகர், ஐபிஎஸ், தாம்பரம் மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆவடி சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக இருந்த கே. பெரோஸ் கான் அப்துல்லா, ஐபிஎஸ், சென்னை போக்குவரத்து (மேற்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  • ஆவடி ரெட்ஹில்ஸ் துணை ஆணையராக இருந்த பி. பாலாஜி, சென்னை போக்குவரத்து (வடக்கு) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை ஆணையராக இருந்த வி. வினோத் சாந்தாராம், ஆவடி மாநகர காவல் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

முக்கியப் பிரிவுகள் மற்றும் சிபிசிஐடி

  • மதுரை மாவட்ட எஸ்பியாக இருந்த பி.கே. அரவிந்த், ஐபிஎஸ், சென்னை ‘கியூ’ பிரிவு சிஐடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பியாக இருந்த சுஜித் குமார், ஐபிஎஸ், சென்னை சபர் கிரைம் பிரிவு-III எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
  • கட்டாயக் காத்திருப்பில் இருந்த ஜி. ஜவஹர், ஐபிஎஸ், சென்னை சிபி சிஐடி மெட்ரோ மண்டல எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கட்டாயக் காத்திருப்பில் இருந்த எஸ். செல்வநாகரத்தினம், ஐபிஎஸ், சென்னை சைபர் கிரைம் பிரிவு-I எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக இருந்த டாக்டர் எம். சுதாகர், ஐபிஎஸ், சென்னை டிஜிபி அலுவலகத்தின் வெளிநாடு வாழ் இந்தியர் நலப் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல் துறையில் நிர்வாக நலன் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி இடமாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top