Close
ஜூலை 23, 2026 1:54 காலை

அரசுக்கு எதிராக பேசும் எம்எல்ஏக்கள் கைது நடவடிக்கைக்கு கொமதேக கண்டனம்

ஈஸ்வரன்

தமிழக அரசுக்கு எதிரான விமர்சனங்களை சொல்பவர்களை, தவெக அதிரடியாக கைது செய்வது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சோஷியல் மீடியாக்களில் எதிர் கருத்து பதிவிடுபவர்களையும், அரசியல் மேடைகளில் அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசுபவர்களையும் அதிரடியாக கைது செய்வது என்பது ஆட்சியாளர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதை காட்டுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டுமல்ல, எம்எல்ஏக்களையும் கைது செய்வது தொடர் கதையாக இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் குற்றம் செய்திருக்கின்ற ஆளுங்கட்சிக்காரர்கள் மீது வழக்கு போடாமல் இருப்பதையும், கைது செய்யாமல் இருப்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

புதிதாக அமைந்திருக்கின்ற தமிழக அரசு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத்திட்டங்களை தீட்டுவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் சுணக்கம் காட்டுவதை திசை திருப்புவதற்காக இதைப் போன்ற செயல்பாடுகள் செய்யப்படுகிது. எம்எல்ஏக்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் ஆகியோரையும், பழனி நில மோசடி பத்திரப்பதிவை விமர்சித்தவர்களையும் கைது செய்வதன் மூலமாக, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இந்த அரசை பற்றி எதுவும் பேசக்கூடாது என்று எச்சரிக்கை விடப்படுகிறது.

தனி மனிதர்களைப் பற்றி பேசினால் வழக்கு போடுங்கள். நீதிமன்றம் முடிவு செய்யட்டும். அரசியல் தலைவர்களையும், எம்எல்ஏக்களையும் கைது செய்வது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதாக அமையும் என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top